முன்னொரு காலத்தில் சீன நாட்டின் ஒரு பகுதியை சிங்காய் என்ற அரசன் ஆண்டு வந்தான் .
பக்கத்து நாட்டைக் கைப்பற்ற கருதினான் அவன் . பெரும்படை , திரட்டிக் கொண்டு அந்த நாட்டை நோக்கிப் புறப்பட்டான் . குதிரையில் அங்கு வந்த ஒற்றன் ,
' ' அரசே ! நல்ல செய்தி . உங்கள் பகைவனான பக்கத்து நாட்டு அரசன் திடீரென்று இறந்து விட்டான் . நாடே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது . இப்பொழுது நாம் தாக்கினால் அந்த நாட்டை எளிதாகக் கைப்பற்றி விடலாம் . எதிர்ப்பே இராது ' ' என்றான் .
தன் படைத் தலைவர்களை அழைத்த அரசன் ,
" பக்கத்து நாடு அரசனை இழந்த சோகத்தில் உள்ளது , இந்தச் சூழலில் போர் தொடுப்பது முறையாகாது . நம் வீரர்களுடன் நாடு திரும்புங்கள் ' ' என்று கட்டளை இட்டான் .
பக்கத்து நாட்டு மக்கள் நடந்ததை அறிந்தனர் . எல்லோரும் ஒன்று கூடிப் பேசினார்கள் . அவர்களில் ஒருவர் . " சோகத்தில் இருக்கும் நம்மை அந்த அரசர் தாக்கவில்லை . அவரைப் போலப் பெருந்தன்மை மிக்கவர் யார் இருக்கின்றனர் ? அவர் செயலைப் பாராட்டி அவரையே நம் நாட்டிற்கும் அரசர் ஆக்குவோம் ' ' என்றார் .
எல்லோரும் அவர் கருத்தை ஏற்றுக் கொண்டனர் .
ஒரு நல்ல நாளில் சிங்காய் அந்த நாட்டிற்கும் அரசன் ஆனான் .
பக்கத்து நாட்டைக் கைப்பற்ற கருதினான் அவன் . பெரும்படை , திரட்டிக் கொண்டு அந்த நாட்டை நோக்கிப் புறப்பட்டான் . குதிரையில் அங்கு வந்த ஒற்றன் ,
' ' அரசே ! நல்ல செய்தி . உங்கள் பகைவனான பக்கத்து நாட்டு அரசன் திடீரென்று இறந்து விட்டான் . நாடே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது . இப்பொழுது நாம் தாக்கினால் அந்த நாட்டை எளிதாகக் கைப்பற்றி விடலாம் . எதிர்ப்பே இராது ' ' என்றான் .
தன் படைத் தலைவர்களை அழைத்த அரசன் ,
" பக்கத்து நாடு அரசனை இழந்த சோகத்தில் உள்ளது , இந்தச் சூழலில் போர் தொடுப்பது முறையாகாது . நம் வீரர்களுடன் நாடு திரும்புங்கள் ' ' என்று கட்டளை இட்டான் .
பக்கத்து நாட்டு மக்கள் நடந்ததை அறிந்தனர் . எல்லோரும் ஒன்று கூடிப் பேசினார்கள் . அவர்களில் ஒருவர் . " சோகத்தில் இருக்கும் நம்மை அந்த அரசர் தாக்கவில்லை . அவரைப் போலப் பெருந்தன்மை மிக்கவர் யார் இருக்கின்றனர் ? அவர் செயலைப் பாராட்டி அவரையே நம் நாட்டிற்கும் அரசர் ஆக்குவோம் ' ' என்றார் .
எல்லோரும் அவர் கருத்தை ஏற்றுக் கொண்டனர் .
ஒரு நல்ல நாளில் சிங்காய் அந்த நாட்டிற்கும் அரசன் ஆனான் .
No comments:
Post a Comment