Sunday, May 3, 2020

கவலை இல்லாதார் யாரும் இல்லை

சிங்கம் ஒன்று ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது.

அது ஒரு நாள், என்ன வலிமை எனக்கு இருந்து என்ன பயன் ?
கூர்மையான நகங்களும் எஃகுப் போன்ற பற்களும் இருந்தும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையே ?
சேவல் கூவுவதைக் கேட்டு அச்சமும் நடுக்கமும் கொள்கிறேனே ?

இப்படி வாழ்வது ஒரு வாழ்க்கையா? ' என்று அலுத்துக் கொண்டது.

அப்பொழுது முறம் போன்ற தன் பெரிய காதுகளை ஆட்டியபடியே யானை ஒன்று அங்கே வந்தது .

" எதற்காக உன் காதுகளை எப்பொழுதும் ஆட்டிக் கொண்டே நடக்கிறாய் ' ' என்று கேட்டது சிங்கம் .

" என் காதுக்குள் எறும்பு நுழைந்து கடித்தால் போதும். என் உயிரே போய் விடும்.

அதற்குப் பயந்துதான் எப்பொழுதும் காதை ஆட்டிக் கொண்டே நடக்கிறேன் '' என்றது யானை .

'இவ்வளவு பெரிய உருவம் கொண்ட  யானையே சிறிய எறும்பிற்குப் பயப்படுகிறதே. நம் நிலை எவ்வளவோ பரவாயில்லை ' என்று மகிழ்ந்தது சிங்கம் .

No comments:

Post a Comment

உவந்து அளிப்பதே உயர்ந்தது

முன்னொரு காலத்தில் புகழ் பெற்ற இசுலாமியத் துறவியாக ஜலால் என்பவர் விளங்கினார் . அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர் . அரசர்கள் பலரும் அவரை வணங...