Sunday, May 3, 2020

பொய்யாமை நன்று !

ஐந்து வயது மகன் தன் தாயும் தந்தையும் வெளியே செல்வதைப் பார்த்தான் .

" மகனே ! நாங்கள் சந்தைக்குப் போகிறோம் . அவ்வளவு தூரம் உன்னால் நடந்து வர முடியாது . நீ அழாமல் வீட்டிலேயே இரு . திரும்பி வந்ததும் உனக்குப் பிடித்த இனிப்பு செய்து தருகிறேன் ' ' என்றாள் அவன் தாய் .

" நான் வீட்டிலேயே இருக்கிறேன் ' ' என்றான் அவன் .

சந்தைக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொண்டு இருவரும் வீடு திரும்பினார்கள் .

" நம் மகன் சாப்பிடுவதற்கு இனிப்பு செய்  ' ' என்றான் கணவன் .

அதற்கு அவன் தாய் " நான் விளையாட்டுக்குச் சொன்னேன் . அதனால்தான் நம் மகன் அடம் பிடிக்காமல் வீட்டிலேயே இருந்தான் " என்றாள் .

“ சின்னப் பையனை இப்படி ஏமாற்றலாமா ? அவனுக்கு என்ன தெரியும் ? பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோமோ அதை அப்படியே பின்பற்றுவான் .

நீ இப்பொழுது அவனை ஏமாற்றினால் அவனுக்குப் பொய் சொல்லக் கற்றுக் கொடுத்தவள் ஆவாய் .

எந்தச் சூழலிலும் எதற்காகவும் பொய் சொல்லக் கூடாது என கற்றுத்தர வேண்டிய  நாமே பொய் பேசினால் எதிர்காலத்தில் நம் மகன் நல்லவனாக இருக்க மாட்டான் ' ' என்றான் கணவன் .

தன் தவற்றை உணர்ந்த அவள் தன் மகனுக்கு இனிப்பு செய்து கொடுத்தால்.

No comments:

Post a Comment

உவந்து அளிப்பதே உயர்ந்தது

முன்னொரு காலத்தில் புகழ் பெற்ற இசுலாமியத் துறவியாக ஜலால் என்பவர் விளங்கினார் . அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர் . அரசர்கள் பலரும் அவரை வணங...