ஓர் அரசனின் அரண்மனை தோட்டத்தில் அருமையான மா
மரம் ஒன்று இருந்தது . அது மிக இனிப்பான பழங்களைத் தந்தது .
அதன் பழங்களைப் பல நாட்டு அரசர்களுக்கும் அன்பளிப்பாக அனுப்பி வைத்தான் அவன் .
' இதைப் போன்ற சுவையான பழத்தை நாங்கள் சாப்பிட்டதே இல்லை . இப்படியே ஆண்டுதோறும் அனுப்பி வையுங்கள் . நம் நட்பு தொடரும் ' என்று எல்லா அரசர்களும் கடிதம் எழுதினார்கள் .
இதனால் மகிழ்ந்தான் அரசன் .
புகழ் பெற்ற அறிஞர் ஒருவர் அரசவைக்கு வந்தார் . " அரசே ! நீங்கள் யாராலுமே செய்ய இயலாத அரிய செயல் என்று எதைக் கருதுகிறீர்கள் ' என்று கேட்டார் .
' ' அரண்மனை தோட்டத்து மா மரம் மிக இனிப்பான பழங்களைத் தருகிறது . அது கசப்பான பழங்களைத் தருமானால் அதையே அரிய செயலாகக் கருதுவேன் ' ' என்று பெருமையுடன் சொன்னான் அரசன் .
அதற்கு அறிஞர் , " அரசே ! நீங்கள் சொயது அரிய செயலே அல்ல ; எளிய செயலே . அரண்மனை தோட்டத்தை என் பொறுப்பில் விடுங்கள் . மூன்றாண்டுகளுக்குள் அந்த மா மரம் கசப்பான பழங்களைத் தருமாறு செய்கிறேன் " என்றார் .
அரசனால் நம்ப முடியவில்லை . " இன்றிலிருந்து மூன்றாண்டுகள் அரண்மனை தோட்டம் உங்கள் பொறுப்பில் இருக்கும் . அதற்குள் நீங்கள் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் . இல்லாவிட்டால் உங்கள் உடலில் உயிர் இருக்காது ' ' என்றான் அவன் .
மூன்றாண்டுகள் கழிந்தன . அரசவைக்குக் கூடை நிறைய மாம்பழங்களை கொண்டு வந்தார் அறிஞர் .
" அரசே ! நீங்கள் சொன்ன மரத்தில் விளைந்த பழங்கள் தாம் இவை . சுவைத்துப் பாருங்கள் ' ' என்று நீட்டினார் .
அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்துக் கடித்தான் அரசன் . அதன் கசப்பு தாங்காமல் துப்பினான் . வியப்பு அடைந்த அவன் ,
' ' அறிஞரே ! நீங்கள் தந்த பழங்கள் என் மா மரத்தின் பழங்களே , என்ன மாயம் செய்தீர் ? எப்படி அதன் சுவையை உங்களால் கசப்பாக்க முடிந்தது ? ' ' என்று கேட்டான் .
' ' அரசே ! அந்த மா மரத்தைச் சுற்றிக் கசப்புச் சுவையுடைய செடி கொடிகளை நட்டேன் . அவையே அந்த மரத்தின் வேர்களிலும் இலைகளிலும் படர்ந்தன . சுற்றுச் சூழல் கசப்பாக இருந்ததனால் அந்த மரத்தின் பழமும் கசக்கிறது .
தீயவர் தொடர்பினால் நல்லவரும் தீயவராவது போல ' ' என்றார் அறிஞர் .' '
என் மா மரம் பழையபடி சுவையான பழங்கள் தர வழியே இல்லையா ? ' என்று வருத்தத்துடன் கேட்டான் அவன் . ' '
அந்த மா மரத்தின் சுற்றுச் சூழலை மீண்டும் நல்லதாக ஆக்குங்கள் . மூன்றாண்டுகளில் நல்ல சுவையான பழங்கள் தரும் ' ' என்றார் அவர் .
மகிழ்ந்த அரசன் அவருக்கு நிறைய பரிசுகள் தந்து அனுப்பி வைத்தான் .
அதன் பழங்களைப் பல நாட்டு அரசர்களுக்கும் அன்பளிப்பாக அனுப்பி வைத்தான் அவன் .
' இதைப் போன்ற சுவையான பழத்தை நாங்கள் சாப்பிட்டதே இல்லை . இப்படியே ஆண்டுதோறும் அனுப்பி வையுங்கள் . நம் நட்பு தொடரும் ' என்று எல்லா அரசர்களும் கடிதம் எழுதினார்கள் .
இதனால் மகிழ்ந்தான் அரசன் .
புகழ் பெற்ற அறிஞர் ஒருவர் அரசவைக்கு வந்தார் . " அரசே ! நீங்கள் யாராலுமே செய்ய இயலாத அரிய செயல் என்று எதைக் கருதுகிறீர்கள் ' என்று கேட்டார் .
' ' அரண்மனை தோட்டத்து மா மரம் மிக இனிப்பான பழங்களைத் தருகிறது . அது கசப்பான பழங்களைத் தருமானால் அதையே அரிய செயலாகக் கருதுவேன் ' ' என்று பெருமையுடன் சொன்னான் அரசன் .
அதற்கு அறிஞர் , " அரசே ! நீங்கள் சொயது அரிய செயலே அல்ல ; எளிய செயலே . அரண்மனை தோட்டத்தை என் பொறுப்பில் விடுங்கள் . மூன்றாண்டுகளுக்குள் அந்த மா மரம் கசப்பான பழங்களைத் தருமாறு செய்கிறேன் " என்றார் .
அரசனால் நம்ப முடியவில்லை . " இன்றிலிருந்து மூன்றாண்டுகள் அரண்மனை தோட்டம் உங்கள் பொறுப்பில் இருக்கும் . அதற்குள் நீங்கள் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் . இல்லாவிட்டால் உங்கள் உடலில் உயிர் இருக்காது ' ' என்றான் அவன் .
மூன்றாண்டுகள் கழிந்தன . அரசவைக்குக் கூடை நிறைய மாம்பழங்களை கொண்டு வந்தார் அறிஞர் .
" அரசே ! நீங்கள் சொன்ன மரத்தில் விளைந்த பழங்கள் தாம் இவை . சுவைத்துப் பாருங்கள் ' ' என்று நீட்டினார் .
அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்துக் கடித்தான் அரசன் . அதன் கசப்பு தாங்காமல் துப்பினான் . வியப்பு அடைந்த அவன் ,
' ' அறிஞரே ! நீங்கள் தந்த பழங்கள் என் மா மரத்தின் பழங்களே , என்ன மாயம் செய்தீர் ? எப்படி அதன் சுவையை உங்களால் கசப்பாக்க முடிந்தது ? ' ' என்று கேட்டான் .
' ' அரசே ! அந்த மா மரத்தைச் சுற்றிக் கசப்புச் சுவையுடைய செடி கொடிகளை நட்டேன் . அவையே அந்த மரத்தின் வேர்களிலும் இலைகளிலும் படர்ந்தன . சுற்றுச் சூழல் கசப்பாக இருந்ததனால் அந்த மரத்தின் பழமும் கசக்கிறது .
தீயவர் தொடர்பினால் நல்லவரும் தீயவராவது போல ' ' என்றார் அறிஞர் .' '
என் மா மரம் பழையபடி சுவையான பழங்கள் தர வழியே இல்லையா ? ' என்று வருத்தத்துடன் கேட்டான் அவன் . ' '
அந்த மா மரத்தின் சுற்றுச் சூழலை மீண்டும் நல்லதாக ஆக்குங்கள் . மூன்றாண்டுகளில் நல்ல சுவையான பழங்கள் தரும் ' ' என்றார் அவர் .
மகிழ்ந்த அரசன் அவருக்கு நிறைய பரிசுகள் தந்து அனுப்பி வைத்தான் .
No comments:
Post a Comment