முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வரதன் என்ற கொடிய அரசன் ஆண்டு வந்தான். அவன் தன் அரண்மனையில் பெரிய
திராட்சைத் தோட்டம் ஒன்றை அமைக்க முயற்சி செய்தான்.
அதற்காகத் தன் அடிமைகளை எல்லாம் கடுமையாக வேலை வாங்கினான். அவன் அடிமைகளில் முதியவனான ஒருவனுக்கு எதிர் காலத்தைச் சொல்லும் ஆற்றல் இருந்தது .
"இந்தத் திராட்சைத் தோட்டத்திலிருந்து ஒரு கிண்ணம் பழச் சாற்றைக் கூட அரசன் சுவைக்க முடியாது . அதற்குள் அவன் இறந்து விடுவான் " என்றான் அவன் .
இதைக் கேள்விப்பட்ட அரசன் கோபம் கொண்டான் . தோட்டத்தில் திராட்சை குலை குலையாக நன்கு பழுத்தது . அரசன் குடிப்பதற்காக அதிலிருந்து ஒரு கிண்ணம் பழச் சாறு அரண்மனைக்கு வந்தது .
கிண்ணத்தைக் கையில் வாங்கினான் அரசன் . தன் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லிய அந்த அடிமையை அங்கு வரவழைத்தான் .
'' ஏ ! அடிமையே உனக்கு என்ன ஆணவம் ?
ஒரு கிண்ணம் பழச் சாறு பருகுவதற்குள் நான் இறந்து விடுவேன் என்றாயே ?
இப்பொழுது என்ன சொல்கிறாய் ?
'' என்று கிண்ணத்தைக் காட்டிக் கேட்டான் அரசன்.
"இந்தப் பழச் சாற்றை நீங்கள் குடிப்பதற்கு முன் எதுவும் நடக்கலாம் " என்றான் அந்த அடிமை .
அப்பொழுது அங்கு ஓடி வந்தான் வீரன் ஒருவன் .
" அரசே ! திராட்சைத் தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்து விட்டது . அது தோட்டத்தையே பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது ' ' என்று அலறினான் .
"அப்படியா ? " என்ற அரசன் பழச் சாற்றுக் கிண்ணத்தை அங்கேயே வைத்தான், ஈட்டியை எடுத்துக் கொண்டு திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றான் . அங்கே பதுங்கியிருந்த கரடி அரசன் மேல் பாய்ந்து அவனைக் கொன்று போட்டது .
அந்த அடிமை சொல்லியபடியே நடந்துவிட்டது.
அதற்காகத் தன் அடிமைகளை எல்லாம் கடுமையாக வேலை வாங்கினான். அவன் அடிமைகளில் முதியவனான ஒருவனுக்கு எதிர் காலத்தைச் சொல்லும் ஆற்றல் இருந்தது .
"இந்தத் திராட்சைத் தோட்டத்திலிருந்து ஒரு கிண்ணம் பழச் சாற்றைக் கூட அரசன் சுவைக்க முடியாது . அதற்குள் அவன் இறந்து விடுவான் " என்றான் அவன் .
இதைக் கேள்விப்பட்ட அரசன் கோபம் கொண்டான் . தோட்டத்தில் திராட்சை குலை குலையாக நன்கு பழுத்தது . அரசன் குடிப்பதற்காக அதிலிருந்து ஒரு கிண்ணம் பழச் சாறு அரண்மனைக்கு வந்தது .
கிண்ணத்தைக் கையில் வாங்கினான் அரசன் . தன் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லிய அந்த அடிமையை அங்கு வரவழைத்தான் .
'' ஏ ! அடிமையே உனக்கு என்ன ஆணவம் ?
ஒரு கிண்ணம் பழச் சாறு பருகுவதற்குள் நான் இறந்து விடுவேன் என்றாயே ?
இப்பொழுது என்ன சொல்கிறாய் ?
'' என்று கிண்ணத்தைக் காட்டிக் கேட்டான் அரசன்.
"இந்தப் பழச் சாற்றை நீங்கள் குடிப்பதற்கு முன் எதுவும் நடக்கலாம் " என்றான் அந்த அடிமை .
அப்பொழுது அங்கு ஓடி வந்தான் வீரன் ஒருவன் .
" அரசே ! திராட்சைத் தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்து விட்டது . அது தோட்டத்தையே பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது ' ' என்று அலறினான் .
"அப்படியா ? " என்ற அரசன் பழச் சாற்றுக் கிண்ணத்தை அங்கேயே வைத்தான், ஈட்டியை எடுத்துக் கொண்டு திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றான் . அங்கே பதுங்கியிருந்த கரடி அரசன் மேல் பாய்ந்து அவனைக் கொன்று போட்டது .
அந்த அடிமை சொல்லியபடியே நடந்துவிட்டது.
No comments:
Post a Comment