முன்னொரு காலத்தில் புகழ் பெற்ற இசுலாமியத் துறவியாக ஜலால் என்பவர் விளங்கினார் . அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர் . அரசர்கள் பலரும் அவரை வணங்கி விலை உயர்ந்த பொருள்களைக் காணிக்கையாகத் தந்தனர் .
ஒரு நாள் , ஏழை உழவர்கள் இரண்டு பேர் துறவியைக் காண வந்தனர் . அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள் .
பின்னர் தாங்கள் உண்பதற்காக வைத்திருந்த கூழைக் காணிக்கைப் பொருளாகத் தந்தார்கள் . மகிழ்ச்சியுடன் அதை வாங்கிய அவர் அந்தக் கூழைக் குடித்தார் . அவர்களும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றனர் .
மீதி இருந்த கூழைத் தம் சீடர்களுக்குக் கொடுத்தார் அவர் . ' எவ்வளவு விலை உயர்ந்த பொருள்கள் நம் குருவிற்குக் காணிக்கையாக வந்துள்ளன . கூழைக் காணிக்கையாகத் தர இவர்களுக்கு எப்படி மனம் வந்தது ' என்று அதை அருவருப்புடன் பார்த்தார்கள் சீடர்கள் .
அவர்களின் மனநிலையை அறிந்த அவர் ,
' ' சீடர்களே ! நாம் நாளும் வணங்கி வழிபடும் இறை தூதர் நபிகள் நாயகம் ஆவார் . எதிரி நாட்டின் மீது படையெடுப்பதற்காக அவருக்குப் பெரும்பொருள் தேவைப்பட்டது . இதை அறிந்த பலர் தங்கள் சொத்துகளில் பாதியை விற்றுப் பணம் தந்தார்கள் .
அபுபக்கர் தன்னிடம் இருந்த எல்லாப் பொருள்களையும் நபிகள் நாயகத்திடம் தந்தார் . இப்படியே ஏராளமான பணம் சேர்ந்தது .
ஏழைக் கிழவி ஒருத்தி , தன் கையில் இருந்த நான்கு பேரீச்சம் பழங்களையும் சிறு ரொட்டியையும் காணிக்கையாக அவரிடம் தந்தாள்.
எளிமையான அந்தக் காணிக்கைப் பொருளைப் பார்த்து அங்கிருந்த பலர் சிரித்து விட்டனர் .
அவர்களைப் பார்த்து நபிகள் நாயகம் , ' நான் சற்று நேரத்திற்கு முன் ஒரு கனவு கண்டேன் . இங்கு காணிக்கையாக வந்த எல்லாப் பொருளையும் ஒரு தட்டில் வைத்தனர் . இன்னொரு தட்டில் நான்கு பேரீச்சம் பழங்களை வைத்தனர் . பேரீச்சம் பழங்கள் இருந்த தட்டே தாழ்ந்து கிடந்தது . எதிர்த் தட்டில் மேலும் மேலும் பொருள்களை வைத்தும் அந்தத் தட்டு சிறிதும் உயரவில்லை .
இதிலிருந்து என்ன தெரிகிறது ? அன்புடன் தரப்படும் காணிக்கைப் பொருள் சிறிதாயினும் விலை உயாத பொருள்களை விட மதிப்பில் உயர்ந்தது .
"நாம் பொருளைப்பார்க்கக் கூடாது . தந்தவர் உள்ளத்தைப் பார்க்க வேண்டும்'' என்றார் .
தங்கள் செயலுக்கு வருந்திய அவர்கள் நபிகள் நாயகத்திடம் மன்னிப்பு வேண்டினார்கள் ' ' என்றார்
ஒரு நாள் , ஏழை உழவர்கள் இரண்டு பேர் துறவியைக் காண வந்தனர் . அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள் .
பின்னர் தாங்கள் உண்பதற்காக வைத்திருந்த கூழைக் காணிக்கைப் பொருளாகத் தந்தார்கள் . மகிழ்ச்சியுடன் அதை வாங்கிய அவர் அந்தக் கூழைக் குடித்தார் . அவர்களும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றனர் .
மீதி இருந்த கூழைத் தம் சீடர்களுக்குக் கொடுத்தார் அவர் . ' எவ்வளவு விலை உயர்ந்த பொருள்கள் நம் குருவிற்குக் காணிக்கையாக வந்துள்ளன . கூழைக் காணிக்கையாகத் தர இவர்களுக்கு எப்படி மனம் வந்தது ' என்று அதை அருவருப்புடன் பார்த்தார்கள் சீடர்கள் .
அவர்களின் மனநிலையை அறிந்த அவர் ,
' ' சீடர்களே ! நாம் நாளும் வணங்கி வழிபடும் இறை தூதர் நபிகள் நாயகம் ஆவார் . எதிரி நாட்டின் மீது படையெடுப்பதற்காக அவருக்குப் பெரும்பொருள் தேவைப்பட்டது . இதை அறிந்த பலர் தங்கள் சொத்துகளில் பாதியை விற்றுப் பணம் தந்தார்கள் .
அபுபக்கர் தன்னிடம் இருந்த எல்லாப் பொருள்களையும் நபிகள் நாயகத்திடம் தந்தார் . இப்படியே ஏராளமான பணம் சேர்ந்தது .
ஏழைக் கிழவி ஒருத்தி , தன் கையில் இருந்த நான்கு பேரீச்சம் பழங்களையும் சிறு ரொட்டியையும் காணிக்கையாக அவரிடம் தந்தாள்.
எளிமையான அந்தக் காணிக்கைப் பொருளைப் பார்த்து அங்கிருந்த பலர் சிரித்து விட்டனர் .
அவர்களைப் பார்த்து நபிகள் நாயகம் , ' நான் சற்று நேரத்திற்கு முன் ஒரு கனவு கண்டேன் . இங்கு காணிக்கையாக வந்த எல்லாப் பொருளையும் ஒரு தட்டில் வைத்தனர் . இன்னொரு தட்டில் நான்கு பேரீச்சம் பழங்களை வைத்தனர் . பேரீச்சம் பழங்கள் இருந்த தட்டே தாழ்ந்து கிடந்தது . எதிர்த் தட்டில் மேலும் மேலும் பொருள்களை வைத்தும் அந்தத் தட்டு சிறிதும் உயரவில்லை .
இதிலிருந்து என்ன தெரிகிறது ? அன்புடன் தரப்படும் காணிக்கைப் பொருள் சிறிதாயினும் விலை உயாத பொருள்களை விட மதிப்பில் உயர்ந்தது .
"நாம் பொருளைப்பார்க்கக் கூடாது . தந்தவர் உள்ளத்தைப் பார்க்க வேண்டும்'' என்றார் .
தங்கள் செயலுக்கு வருந்திய அவர்கள் நபிகள் நாயகத்திடம் மன்னிப்பு வேண்டினார்கள் ' ' என்றார்